Home முக்கியச் செய்திகள் நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை

நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை

0

நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் வழக்கொன்றுக்கு சாட்சியம் அளிப்பதற்காக அழைப்பாணை விடுத்துள்ளது.

நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை(24) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம்

இந்நிலையில், 22.07.2017 ஆம் ஆண்டு  நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/jaffna-high-court-summons-to-judge-ilanchelian-1713882883?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version