அணையா விளக்கு நினைவுத்தூபியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு
குறித்த முறைப்பாடானது நேற்று (08.12.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் நிலையத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் இந்த முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
