Home இலங்கை சமூகம் யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகுச் சேவை: வெளியான தகவல்

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகுச் சேவை: வெளியான தகவல்

0

யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் (S. Niranjan Nandagopan) தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது IndSri Ferry Services Private Limited இன் நிர்வாக இயக்குநர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் பயணிகளுக்கு அறவிடப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைந்துள்ளதாகவும் நிரஞ்சன் நந்தகோபன் குறிப்பிட்டுள்ளார்.

வாரத்தில் நான்கு நாட்கள் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக இயங்குகிறது.

இந்த படகு சேவையானது வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.

குறித்த சிவகங்கை பயணிகள் கப்பல்  2023 ஒக்டோபர் இல் இரு நாடுகளுக்கும் இடையேயான தனது படகு சேவையை ஆரம்பித்தது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு 2024 ஒகஸ்ட் 16 அன்று அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள்

மேலும்,  இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான பிரயாணச் சீட்டுக்களை இணையம் மூலம் பதிவு செய்யலாம்.

படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடு கட்ட இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

​​இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் இந்த சேவையில் காணப்படுகின்றன என எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் (S. Niranjan Nandagopan) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version