Home இலங்கை அரசியல் தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம்: தமிழுரையாற்றிய கிழக்கு ஆளுநர்

தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம்: தமிழுரையாற்றிய கிழக்கு ஆளுநர்

0

புதிய அரசாங்கத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள ஜயந்த லால் ரத்னசேகர, நாட்டில் தேசிய ஒற்றுமைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது, “கடந்த 30 வருடங்களாக நாம் தேசிய ஒற்றுமைக்காக பேராடி வருகின்றோம். எனவே, இனிவரும் காலங்களில் அவ்வாறான ஒரு நிலைமை வர கூடாது. அதுவே எமது முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்” என வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version