Home இலங்கை சமூகம் புதிய பிரதமரிடமே கொண்டு செல்லப்பட்ட புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்

புதிய பிரதமரிடமே கொண்டு செல்லப்பட்ட புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்

0

புலமைப்பரிசில் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் பணித்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கீடுகள்

பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version