ஹன்வெல்ல களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 10.01 மீற்றர் ஆக தற்போதய நிலவரப்படி உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஹன்வெல்ல களனி ஆற்றின் அளவீட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இது நதியை பெரிய வெள்ள மட்டப் பகுதியில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல்நிலை நீரோட்டம்
முந்தைய வெள்ள நிகழ்வுகளில், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேல்நிலை நீர் வருவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை.
இருப்பினும், இந்த முறை கொழும்புக்கு அருகிலுள்ள பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் மேல்நிலை நீரோட்டம் வரும் நீரோட்டம் நிலைமையை மிகவும் மோசமாக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
