Home உலகம் கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

0

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் குறித்து தொடரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.

தடயவியல் அறிக்கைகள் 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh)ஆகியோரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அத்தோடு சிலரால் திட்டமிட்டு தான் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக DNA மற்றும் தடயவியல் அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, சந்தீப் கோஷ், மருத்துவமனைின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை அழித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறை அதிகாரி

அத்தோடு, அவருக்கு உடந்தையாக செயற்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரையும் சிபிஐ கைதுசெய்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தீப் கோஷ் கொலை சம்பவம் தொடர்பில் முக்கிய ஆதாரங்களை அழித்துள்ளதும் இதற்கு குறித்த காவல் அதிகாரி உதவியமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகும் குற்றச்சாட்டுக்களினால் தொடர் போராட்டங்களை பாரியளவில் முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை பணிக்கு திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த போதும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

போராட்டங்கள் தொடர்பில் மம்தா பானர்ஜியுடன் வைத்தியர்கள் பேச்சு வார்ததைகளை முன்னெடுக்க தயாராக இல்லாத காரணத்தினால் அவர் பதவி விலக தயார் என தெரிவித்துள்ளமை பாரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version