Home இலங்கை அரசியல் அம்பாறையில் தனித்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலனை

அம்பாறையில் தனித்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலனை

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்திக்கவுள்ளது. 

எனினும், அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

தொலைபேசி சின்னம்

இதற்கிடையே, ரிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முடிவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version