Home இலங்கை அரசியல் வடக்கு ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!

வடக்கு ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!

0

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுடன் இன்று(23.10.2024) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி
விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு
நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

காணி பிணக்குகள்

இதேவேளை, அமெரிக்க தூதுவர் காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை ஆளுநரிடம்
கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அத்துடன், தற்போது மேன்மை தங்கிய ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள்,
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன எனவும் அவற்றை
தீர்ப்பதற்கு தற்போது உள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை
பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான
அமெரிக்க தூதுவரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version