Home இலங்கை அரசியல் ராஜபக்சக்களை தன்வசம் வைத்துள்ள ரணில்: மொட்டு அணி கடும் சாடல்

ராஜபக்சக்களை தன்வசம் வைத்துள்ள ரணில்: மொட்டு அணி கடும் சாடல்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா (Nimal Lanza) தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து தரப்புக்களையும் அதிபர் தற்போதும் தன்வசம் வைத்துள்ளார்.

நிச்சயமற்ற நிலை

அந்தவகையில், கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardana) பேரணியில் அதிபர் கலந்துகொண்டமைக்கு நிமல் லான்சா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரோஹித் அபேவர்த்தனவின் பேரணி, நிமல் லான்சாவின் செல்வாக்கை மிஞ்சும் வகையில் அமைந்திருந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து லான்சா அணி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், அதன் இருப்பு குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version