Home முக்கியச் செய்திகள் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

0

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (29) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு
விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய
சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன்
தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் இன்றைய தினம் வியாழக்கிழமை (29) மன்னார்
நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கு விசாரணை

இதன் போது, நீதிமன்றத்திற்கு சென்ற சட்டத்தரணிகள், எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும்
சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து நாளைய தினம் (30) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள
உள்ளதோடு ,ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ தெரிவித்துள்ளார். 

Source: https://ibctamil.com/article/lawyers-have-gone-on-strike-mannar-1724918419?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version