Home இலங்கை அரசியல் வடக்கு – கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள்

வடக்கு – கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள்

0

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது மட்டக்களப்பில் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வீணைச் சினத்தில் களமிறங்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகையா இராசமாணிக்கம் உட்பட 8 பேர் மட்டக்களப்பில் களமிறஙக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

குறித்த வேட்புமனு தாக்கல் இன்று இடம்பெற்றுள்ளது.

ஈ.பி.டி.பி கட்சி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில்
போட்டியிட்டியடவுள்ளனர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்தமுறை
புதியவர்கள் 8 பேர் களமிறக்கப்பட்டடுள்ளனர்.

செய்தி – பவன்

யாழ்ப்பாணம் – மொட்டுக்கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன”
யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ்,
கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். 

செய்தி – கஜி

வவுனியா – தமிழரசுக் கட்சி

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைத்தியர் ப.சத்தியலிங்கம்
தலைமையில் தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கில்
தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
வன்னிக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்தது. 

செய்தி – திலீபன் 

வவுனியா –  மக்கள் போராட்ட முன்னணி

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை 4 கட்சிகளை
உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை
சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, சோசலிச மக்கள் மன்றம்,
காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடு
முழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள்
வருகைதந்திருந்தனர். 

செய்தி – திலீபன்

அம்பாறை – தமிழரசுக் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வீடு சின்னத்தில்
போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் இன்று (10) வேட்புமனு
தாக்கல் செய்தனர்.

கட்சியின் வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான முன்னாள்
நாடாளுமன்றத் உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) முன்னாள்
தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)குபேந்திரராஜா ஜெகசுதன்(
திருக்கோவில் )கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் ) அருள்ஞான மூர்த்தி
நிதான்ஞ்சன்( கல்முனை ) பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)பாக்கியம்
மஞ்சுளா( பெரிய நீலாவணை) ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) கனகரத்தினம்
ஜனார்த்தனன்( ஆலையடிவேம்பு )ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

செய்தி – பாருக்

அம்பாறை – தமிழ் தேசிய மக்கள்
முன்னணி  

அம்பாறையில்  தமிழ் தேசிய மக்கள்
முன்னணி  கட்சியினர் திகாமடுல்ல தேர்தல்
மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று  மாவட்டச் செயலகத்தில்
கையளித்தனர்

.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள்
பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ்
துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று
அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அத்துடன் அகில
இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.

செய்தி – பாருக்

NO COMMENTS

Exit mobile version