Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்று

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்று

0

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களைத் தாக்கலை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith madduma bandara)உள்ளிட்ட 4 தரப்பினர் செய்துள்ளனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு 

இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் ஒன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.

எனினும் அன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் குறித்த வழக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version