Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் திகதி: அமைச்சர் கூறிய தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் திகதி: அமைச்சர் கூறிய தகவல்

0

இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று(28.01.2025) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்

அத்துடன், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version