Home இலங்கை அரசியல் வாகனங்களை திருப்பி தருமாறு மகிந்த – மைத்திரி கோரிக்கை.. அரசாங்கத்தின் தீர்மானம்!

வாகனங்களை திருப்பி தருமாறு மகிந்த – மைத்திரி கோரிக்கை.. அரசாங்கத்தின் தீர்மானம்!

0

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாகனங்களை திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கள் பாதுகாப்பிற்காக அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் இந்தக் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு

மதிப்பாய்வின் பின்னர் வாகனங்களை திரும்ப வழங்குவதா அல்லது இல்லையா என தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வாகனங்கள் கையகப்படுத்துவதால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version