Home இலங்கை அரசியல் இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் இடையே விசேட சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் இடையே விசேட சந்திப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவை (Basil Rajapaksa) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) முன்னிலைப்படுத்தி, அவருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுன தரப்பு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இந்த சந்திப்பு நேற்று (26.04.2024) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

இந்திய அரசாங்கம் 

குறித்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சீன ஆதரவாளராக காட்டப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ச இந்திய தரப்புக்கு சார்பானவராகவே தம்மை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்திய அரசாங்கம் அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் குழுவினரையும் நாட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை பேசுபொருளாக அமைந்துள்ளது.

டிக்டோக் தடை குறித்த அமெரிக்காவின் சட்டம் : பதிலளித்துள்ள சீனா

வடக்கில் கோரிக்கைகளை ஏற்காத அரசு: அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version