பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், வரும் 30 ஆம் திகதி தேடும் பணி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 2014 இல் மலேஷிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் 239 பேருடன் சென்றது.
வழக்கமான பாதை
இதில் பெரும்பாலானோர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்த நிலையில் வழக்கமான பாதையில் இருந்து விலகி தெற்கு இந்திய பெருங்கடலில் விபத்துக்கு உள்ளானதாக ரேடார் தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும், விமானத்தின் இறக்கைகளை தவிர மற்ற பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
தேடும் பணி
மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஓசன் இன்பினிட்டி என்ற ரோபோட்டிக் நிறுவனம் 2018 இல் ஈடுபட்டது.
இருப்பினும் கண்டுபிடிக்கவில்லை தற்போது அதே நிறுவனம் மலேஷிய விமானத்தை மீண்டும் தேட முன்வந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தால் மட்டுமே 631 கோடி ரூபாய் கட்டணம் வழங்கப்படும் என மலேஷிய அமைச்சரவை சமீபத்தில் நிபந்தனை விதித்தது.
இதை ஏற்ற ஓசன் இன்பினிட்டி நிறுவனம் வரும் 30 முதல் மீண்டும் தேடுதலை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
