Home இலங்கை அரசியல் ஆளும் கட்சி பக்கம் சாய்ந்த முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்! மனோ எம்.பி நடவடிக்கை

ஆளும் கட்சி பக்கம் சாய்ந்த முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்! மனோ எம்.பி நடவடிக்கை

0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஹல்துமுல்ல பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தேசிய மக்கள் சக்தியால் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக பணத்தை பெற்று வாக்களித்ததற்காகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இணைய அவர்கள் இருவரும் பண வெகுமதிகளை பெற்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பழைய நெறிமுறைகள்

மாற்றத்தை கொண்டு வருவதாக உறுதியளித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும், அவர்கள் பண வெகுமதிகளை வழங்கி பழைய நெறிமுறைகளையே பின்பற்றுவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version