இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(08.04.2025) உரையாற்றிய மனோ கணேசன், இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள்
குறித்து வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவுடன், இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், இதனால் முழு நாடும் அவற்றைப் பற்றி
அறியும்.
வெளியுறவு அமைச்சரின் பதில்
அவை ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று
நீங்கள் சொன்னீர்கள். சரி, அவற்றை தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன்
மூலம், முழு நாட்டையும் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்ல முடியும், என்று மனோ
கணேசன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியில் உள்ள சில கட்சிகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்து
நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக, விஜித ஹேரத் மீது குற்றம் சாட்டுவதாக,
தெரிவித்த அமைச்சரின் கூற்றுகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ
கணேசன், எதிர்க்கட்சி ஒருபோதும் அத்தகைய கூற்றுக்களை முன்வைக்கவில்லை என்று
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவுடன் அதே ஒப்பந்தங்களைச் செய்ய முயற்சித்தபோது,
நாங்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டியது உங்கள் கட்சிதான்”
என்று எதிர்க்கட்சி உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கணேசனின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர்
விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்துரையாடிய பிறகு,
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பான பதிலை
வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்.
