Home இலங்கை சமூகம் தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரிய ஊழியர் பற்றாக்குறை

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரிய ஊழியர் பற்றாக்குறை

0

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்: ஆரம்ப விலை இதுதான்

அரசாங்க கணக்காய்வாளர் நாயகம்

அதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன (W.P.C. Wickramarathne)ஊடகமொன்றிற்கு தெரிவித்ததாவது

கணக்காய்வாளர்கள் பற்றாக்குறையினால் கணக்காய்வு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டப்போகும் ராசியினர் நீங்களா…! இன்றைய ராசிபலன்

600 விண்ணப்பங்கள்

அத்துடன், 165 கணக்காய்வு அத்தியட்சகர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிக்குமாரின் பின்னணியை மறைக்கும் மகிந்தானந்த: சபா குகதாஸ் கேட்ட கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version