Home இலங்கை அரசியல் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழரசுகட்சியின் மே தின பேரணி

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழரசுகட்சியின் மே தின பேரணி

0

நாடளாவிய ரீதியில் மே தின பேரணி நடைபெற்று வரும் நிலையில், தமிழரசு கட்சியின் மேதின கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய,
நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் மட்டக்களப்பில் பேரணியொன்று நடைபெற்று வருகின்றது.

இந்த பேரணியில் பெருதிரளான மக்கள் கலந்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கிளிநொச்சி

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் இவ்வாறானதொரு பேரணி நடைபெற்று வருகின்றது.

குறித்த பேரணியில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஐா ஆகியோர் கலந்துகொண்டிருந்த நிலையில், சிறப்பு அதிதியாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் கலந்து கொண்டுள்ளார். 

Source: https://ibctamil.com/article/may-day-in-sri-lanka-rally-shankiyan-sritharan-1714560002

NO COMMENTS

Exit mobile version