Home முக்கியச் செய்திகள் தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

0

தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்கள்  காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள (Criminal Investigation Department) அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி

அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும்  அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் (india) சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version