Home உலகம் கனடாவில் காணாமற்போன தமிழர் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு

கனடாவில் காணாமற்போன தமிழர் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு

0

கனடாவில் (canada) தமிழர் ஒருவர் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி கனடாவின் பிரம்டன் நகரில் வசிக்கும் யோகராஜ் (64) என்ற தமிழரே காணாமற் போனவராவார்.

கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் இவரை இறுதியாக பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்கள் கோரிக்கை

அவர், ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுண்ட் எடையுடையவர் எனவும் இறுதியாக நீல நிற சட்டையும், கருப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஹோண்டா ஒடிசி ரக வாகனம் ஒன்றை பயன்படுத்தி இருந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவரை கண்டுபிடித்து தருமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை இவர் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை வழங்குமாறு பீல் பிராந்திய காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/missing-tamil-in-canada-1723265130

NO COMMENTS

Exit mobile version