Home இலங்கை அரசியல் இந்தியாவில் மோடியும் இலங்கையில் ரணிலும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்!

இந்தியாவில் மோடியும் இலங்கையில் ரணிலும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்!

0

இந்தியாவில் மோடி எப்படியோ அதுபோலவே இலங்கையில் அதிபர் ரணில் எனவும் இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார்கள் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“சவாலான சூழ்நிலையிலேயே இந்நாட்டை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பொறுப்பேற்றார்.

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

அதிபராக தெரிவு 

அவர் இதற்கு முன்னர் அதிபராக தெரிவுசெய்யப்பட்டிருந்தால் இந்த நாடு சிறந்த நிலையில் இருந்திருக்கும். அதனை அவர் தனது செயல்மூலம் நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றுவருகின்றது. அத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் மீண்டும் பிரதமர் ஆவார். அவர் இந்தியாவை நேசிக்கின்றார்.

இந்தியாவில் மோடி போல் தான் இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுவருகின்றார். அவர் நிச்சயம் அதிபராக வேண்டும்.” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு குறித்து இலங்கை-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version