அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி(narendra modi) வெளியிட்டுள்ள பதிவில்,
ஆழ்ந்த கவலை
“எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…
— Narendra Modi (@narendramodi) July 14, 2024
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
வன்முறைக்கு இடமில்லை
அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.