Home இலங்கை பாகிஸ்தான் கைதிகளுக்கு இலங்கையில் விடுதலை

பாகிஸ்தான் கைதிகளுக்கு இலங்கையில் விடுதலை

0

சிறிலங்காவில் (Sri Lanka) தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் (Pakistan) கைதிகளை திருப்பி அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திர ஸ்ரீ விஜய் குணரத்ன (Ravindra Wijegunaratne)  மற்றும் உள்நாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்விக்கும் ( Mohsin Naqvi)  இடையில் பாகிஸ்தானில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்விவகார அமைச்சு

இந்நிலையில், 43 கைதிகளை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுடன் அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் கடந்த ஒரு மாதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு ஆதரவளித்த இராஜதந்திரிக்கு உள்விவகார அமைச்சர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version