நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல்
விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
திடீர் தீப்பரம்பல்
இதேவேளை, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.
இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் (02) மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
