Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் : வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தல் : வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (21) காலை 7.00 முதல் ஆரம்பமாகியுள்ளது.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

ஜனநாயக கடமை

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள அளவெட்டி, சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) பட்டிருப்பு ( களுவாஞ்சிகுடி) மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று காலை வாக்களித்துள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தலவாக்கலை வட்டகொட – மடக்கும்புர தெற்கு தமிழ் வித்தியாலயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

NO COMMENTS

Exit mobile version