Home இலங்கை அரசியல் வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை – செயலிழந்த சிசிடிவி…..! திடுக்கிடும் உண்மைகள்

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை – செயலிழந்த சிசிடிவி…..! திடுக்கிடும் உண்மைகள்

0

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalendiran) வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட தனது சகோதரனின் உச்சம் தலையில் கம்பியால் அடித்த தடம் உள்ளது, உடலில் பல பகுதிகளில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (17.10.2024) மட்டு ஊடக அமையத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை காவல்துறையினர் முன்னெடுத்து உள்ளதுடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமரா மூன்று மாதங்களாக வேலை செய்யவில்லை என்பது அவர் சம்பவம் நடந்த போது கொழும்பில் இருந்தார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சகோதரி இங்கு  குறிப்பிட்டார்.

படுகொலை சம்பவம் தொடர்பாக உறிவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் கீழுள்ள காணொளியில்,

https://www.youtube.com/embed/YhUMeVTICY4

NO COMMENTS

Exit mobile version