சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது முத்து மீனாவுக்கு எதிராக ரோகிணி செய்த செயல் லேட்டஸ்ட் ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.
சிட்டி ரோகிணிக்கு போன் செய்து முத்துவின் கார் சாவியை தரும்படி கேட்கிறார். அவரும் சாவியை எடுத்து வீட்டுக்கு வெளியில் போடுகிறார். அவர் காரில் எதோ செய்துவிட்டு நாளை முத்து கதை முடிஞ்சது என கூறிவிட்டு போகிறார்.
முத்து தப்புவாரா?
முத்து மற்றும் மீனா இருவரும் காரில் ஏறி கிளம்ப நினைக்கும்போது சிலர் பூ வாங்க வந்துவிடுகின்றனர். அதன் பின் சைக்கிளில் முட்டை கொண்டு வருபவர் முட்டைகளுடன் கார் மீது விழுந்துவிடுகிறார்.
அதை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு அதன் பின் முத்து அந்த காரில் ஏறி ஸ்டார்ட் செய்கிறார். அவர் இதில் இருந்து தப்புவாரா? ப்ரோமோ பாருங்க.
