Home இலங்கை அரசியல் பிணையில் விடுவிக்கப்பட்ட யோசித : அரசாங்கத்திற்கு நாமல்ராஜபக்ச விடுத்த சவால்

பிணையில் விடுவிக்கப்பட்ட யோசித : அரசாங்கத்திற்கு நாமல்ராஜபக்ச விடுத்த சவால்

0

தான் அல்லது தனது சகோதரர் யோசித ராஜபக்சவோ (Yoshitha Rajapaksa) தவறிழைத்திருந்தால் அரசாங்கம் அதனை  நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச (Namal Rajapaksa) சவால்விடுத்துள்ளார்.

கொழும்பு (Colombo) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் (27.01.2025) வருகைதந்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணி கொள்வனவு 

மேலும் நாடு எதிர்நோக்கும் கடும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு பதிலாக அரசாங்கம் தனது குடும்பத்தினை இலக்குவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களும் சட்டவிரோதமாக காணிகளை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர் அவர்களிற்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் உள்ளன என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ள அவர் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அரசியல் மயப்படுத்தக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நான் மாத்திரம் அரசாங்கத்தை விமர்சித்துவருகின்றேன் இதனால் அரசாங்கம் எங்கள் குடும்பத்தை இலக்குவைக்கின்றது குறிப்பாக எனது சகோதரரை இலக்குவைக்கின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/ExUFHc5d0Ok

NO COMMENTS

Exit mobile version