Home இலங்கை அரசியல் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை பாதுகாப்போம்…! அடித்துக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை பாதுகாப்போம்…! அடித்துக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

0

எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

குருணாகல் (Kurunegala) – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார கொள்கை

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நகரத்தை அபிவிருத்தி செய்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம்.

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.

மனிதாபிமான கண்காணிப்பு

சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள்.

இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை.

நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம்.

தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/namal-said-they-will-protect-military-armed-forces-1724902927

NO COMMENTS

Exit mobile version