13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க விரும்பவில்லை எனவும் அது நடக்காத காரியம் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும்.கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ்,முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர். தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள்.
இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர்.
தமிழ் -சிங்கள கலாச்சாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம்.
வடக்கில் பாதையோ அல்லது அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனே. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதல்ல.
தென் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும்.
வடக்கில் அரசியல் ரீதியாக தனி நாடு தேவை போன்ற கோரிக்கைகள் இருக்கிறது. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு.” என தெரிவித்துள்ளார்.
