Home இலங்கை அரசியல் பதவிக்காலம் குறித்து ரணிலால் யோசனை முன்வைப்பு: செய்திகளின் தொகுப்பு

பதவிக்காலம் குறித்து ரணிலால் யோசனை முன்வைப்பு: செய்திகளின் தொகுப்பு

0

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலையை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

மதவாச்சியில், இன்று (05.07.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக ஒரு இடத்தில் 5 ஆண்டுகள் எனவும் மற்றுமொரு இடத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என கூறியுள்ளார். 

இது உள்ளி்ட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு…

Source: https://tamilwin.com/article/news-collection-today-1720260662

NO COMMENTS

Exit mobile version