Home இலங்கை அரசியல் வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0

சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)  கையொப்பமிட்டுள்ளார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (14) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயேட்சை வேட்பாளர்

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளல் நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவருக்கான கட்டுப்பணத்தை ஜூலை 26ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version