Home இலங்கை அரசியல் தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள அறிவிப்பு

தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் சுப நேரம், ராகுகாலம் போன்ற விடயங்களை பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்பது பல வருட அனுபவத்தில் தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தையும் கருத்திற் கொண்டு வேட்பு மனுத் தாக்கல் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதி

ராகு காலத்தின் அடிப்படையில் மட்டும் தேர்தல் திகதி குறித்து தீர்மானிக்கப்படாது என்ற கருத்து பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தும் தினம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த செப்டம்பர் மாதம் 17ம் திகதி பெளர்ணமி தினம் என்பதனால் அந்த தினத்தில் வாக்களிப்பு நிலையங்களாக விஹாரைகளை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கு பின்னர் மிகவும் பொருத்தமான ஓர் அண்மைய நாள் ஒன்றில் தேர்தல் நடத்தப்படும் என்பதனை பொறுப்புடன் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version