அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு
பற்றாக்குறை இல்லை என்று, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி,
பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
நாட்டில் தற்போது மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு
பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய
மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விரிவான நடவடிக்கைகள்
இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால்
பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த இடையூறுகள் புதியவை அல்ல, அவை பல ஆண்டுகளாக உள்ளன,” என்று அவர்
கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்குள் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க தற்போது விரிவான
நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக
விஜேமுனி தெரிவித்துள்ளார்.
