விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது மகாராஜா படம். ரசிகர்களும் படத்தை கொண்டாடுவதால் படம் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்களில் 15 கோடி ருபாய் அளவுக்கு மகாராஜா வசூலித்து இருக்கிறதாம்.
முதலில் நடிக்க இருந்தது இவரா
நித்திலன் முதலில் இந்த பட கதையை விஜய் ஆண்டனியிடம் தான் சொன்னாராம். அவரும் கதை பிடித்து உடனே படத்தை தொடங்கலாம் என கூறினாராம்.
ஆனால் Passion ஸ்டுடியோஸ் நிறுவனம் இயக்குனரை ஒப்பந்தம் செய்து வைத்திருப்பதால் அவர்கள் கதையை கொடுக்க முடியாது என கூறிவிட்டார்களாம். அதற்கு பிறகு அந்த நிறுவனம் மூலமாக விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி, அவரும் உடனே ஓகே சொன்னதால் மகாராஜா படம் உருவாகி இருக்கிறது.
Source: https://cineulagam.com/article/not-vijay-sethupathi-this-hero-wanted-maharaja-1718518877
