யாழ்ப்பாணம்-வேலணை பகுதியில் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற
ஊடகவியலாளரை தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது இன்று (6) வேலணை- துறையூரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் இன்று நடைபெற்ற உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை
பிரதேசத்தின் கள நிலவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுட்டுக்
கொண்டிருந்தார்.
முறைப்பாடு பதிவு
இந்தநிலையில், வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே தேசியமக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து ,குறித்த சம்பவத்தை காணொளி செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே தேசியமக்கள் சக்தி குழு
ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளது.
