ஜனாதிபதி தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் வேட்பாளராக, சட்டத்தரணி நுவான் போபகேவுக்கு (Nuwan Bopage) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி (Dharmasiri Lankapeli) அவர் சார்பில் இன்று (13) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 34 ஆன உயர்ந்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அத்துடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நாளை (14) நண்பகலுடன் நிறைவடையவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
