Home இலங்கை பொருளாதாரம் அரசாங்கத்திற்கு கிடைத்த பல மில்லியன் ரூபா சேமிப்பு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

அரசாங்கத்திற்கு கிடைத்த பல மில்லியன் ரூபா சேமிப்பு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

0

கல்வியற் கல்லூரி மாணவர்களின் ஆட்சேர்ப்பு மூலம், சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,”இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா சேமிக்க முடிந்தது.

ஆட்சேர்ப்பு

கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது.

இதேவேளை அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின் அனுமதியுடன் இந்த பணிக்கான முழு தொழில்நுட்ப ஆதரவையும் information institute of Technology வழங்கியுள்ளது.

மேலும் இம்முறை 04 மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடிந்தது.”என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version