Home இலங்கை சமூகம் தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு விநியோகம்

தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு விநியோகம்

0

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று(10) முதல் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்கா

கவுடுல்ல தேசிய பூங்காவில் நேற்று (09.08.2025)) நீண்ட வரிசைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version