Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத் தேர்தல் 2024: 400 ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!

நாடாளுமன்றத் தேர்தல் 2024: 400 ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்,
கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்

இதேவேளை, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வேட்பாளர் அடையாள அட்டைகள் தங்கள் சொத்து மற்றும் கடன்களை அறிவித்த வேட்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version