Home இலங்கை அரசியல் நாமலின் அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் கூடவில்லை.. வெளியான காரணம்

நாமலின் அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் கூடவில்லை.. வெளியான காரணம்

0

நாமல் ராஜபக்ச வழங்கிய கடித்தத்திற்காக நாடாளுமன்றம் கூடவில்லை என தெரியவந்துள்ளது.

‘டித்வா’ சூறாவளி பாதிப்புக்கான நிவாரணகளை வழங்கத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையின் சிறப்பு அமர்வை கூட்டவுள்ளார்.

ரூ. 1,000 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு

டிசம்பர் 18, வியாழக்கிழமை நடைபெறும் அவசர அமர்வில், அரசாங்கம் ரூ. 1,000 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தின் அவசர அமர்வை நடத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் ரூ. 500 பில்லியன் குறைநிரைப்பு மதிப்பீட்டாக இருந்தாலும், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசரகால மீளமைப்புக்காக புதிய மதிப்பீடுகளைக் கணக்கிட்ட பிறகு இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளது.

இந்த குறைநிப்புமதிப்பீடு டிசம்பர் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்களிப்புக்கு விடப்படும். அதன் பிறகு சபை ஜனவரி 6, 2026 வரை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ பிரதமருக்கு அனுப்பி கடித்தத்திற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக மொட்டுக் கட்சி செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  

NO COMMENTS

Exit mobile version