Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் : பொன்சேகா விடுத்துள்ள அழைப்பு

ஜனாதிபதி தேர்தல் : பொன்சேகா விடுத்துள்ள அழைப்பு

0

நாட்டு மக்களின் எதிர்காலம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரியான முடிவை எடுங்கள்

“உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால் இந்த முடிவை நீங்கள் சரியாக எடுக்க வேண்டும். இன்று நமது தாய்நாடு சிதைந்து அழிந்து வருகிறது.

கடன் வாங்கிய ஆட்சியாளர்கள் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து அந்த கடனில் கப்பம் மற்றும் லஞ்சம் வாங்கியதால் உங்களுக்கெல்லாம் எந்த பலனும் கிடைக்கவில்லை. “என தெரிவித்தார்.

மக்கள் எட்டியும் பார்ப்பதில்லை

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள பொன்சேகாவின் கூட்டத்தை மக்கள் எட்டியும் பார்ப்பதில்லை என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/people-must-make-the-right-decisions-1725571467

NO COMMENTS

Exit mobile version