Home இலங்கை சமூகம் வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

0

வவுனியா (Vavuniya) குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக கடவுச்சீட்டுக்காக காத்திருந்த மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.

கடவுச்சீட்டுக்காக வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக ஆறு நாட்களிற்கு மேல் அடிப்படை வசதியின்றி வீதி ஓரத்தில் இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திய இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா என இதன் போது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த திணைக்களத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் கையளிக்கப்படுகின்றன.

கடவுச்சீட்டுக்கள் கையளிப்பு 

வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் குறித்த கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. 

NO COMMENTS

Exit mobile version