Home இலங்கை அரசியல் ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

0

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன இறுதி 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

இதன்படி, அதிபரால் முன்னர் குறிப்பிட்டபடி, அந்தக் காலப்பகுதியில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.பி.க்களை அரசு பக்கம் இணைக்கவேண்டும்.

வழங்கப்பட்ட கால அவகாசம் 

பொதுஜன பெரமுனவினால் அதிபருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 29ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு உரிய எண்ணிக்கையான எம்.பி.க்கள் அழைக்கப்படாவிடின் அதிபர் தேர்தலில் தமது கட்சிஆதரவளிக்க மாட்டாது என முன்னணி அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version