Home முக்கியச் செய்திகள் திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட நபர் !

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட நபர் !

0

திருகோணமலை (Trincomalee) துறைமுக காவல் பிரிவுக்குட்பட்ட மனையாவேளி பிரதேசத்தில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலமானது நேற்று (02) பிற்பகல் 4.15 கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், 52 வயதுடைய தமிழ் வேந்தன் (Tamil Vendan) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரழந்தவரின் சடலம் 

இதனடிப்படையில், உயிரழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் தவறான முடிவெடுத்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version