Home இலங்கை அரசியல் உடல் சுகயீனம் ஏற்பட்ட மாவையை சந்தித்த புளொட் உறுப்பினர்கள்!

உடல் சுகயீனம் ஏற்பட்ட மாவையை சந்தித்த புளொட் உறுப்பினர்கள்!

0

திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு
கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை புளொட் உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முன்னாள் மாகாண சபை
உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன்
மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப
தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர்.

தமிழ் தேசிய ஒற்றுமை

இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு
வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக
நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version