Home இலங்கை சமூகம் இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

0

குளியாபிட்டிய – ஷொருகம பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றையும், சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து 31 வயதுடைய ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் மாயம்: விசாரணையில் சிக்கிய அரசியல்வாதி

வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்

அதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வான் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) – 0718 591 260
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி – 0773 528 325 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த பரபரப்பு – அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version